(ஆதவன்)
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் மற்றும் அவரது குடும்பத்தினருக்குமான வீரவணக்க நிகழ்வு டென்மார்க்கில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்தும் பெரும் எண்ணிக்கையானோர் பங்கேற்றுள்ளனர்.
தேசியத் தலைவரின் மூத்த சகோதர னான வேலுப்பிள்ளை மனோகரன் தலைமையில் வீரவணக்க நிகழ்வு நேற்று உள்ளூர் நேரம் பி.ப. 2 மணிக்கு டென்மார்க்கில் உள்ள அரங்கத்தில் இடம்பெற்றுள்ளது. விசேடமாக ஒழுங்கு செய்யப்பட்ட மண்டபத்தில் தேசியத்தலைவரின் ஆளுயர திருவுருவப்படம் நிறுத்தி வைக்கப்பட்டதுடன் தேசியத் தலைவரின் குடும்பத்தினரை ஓவியமாக வரைந்து தயாரிக்கப்பட்டிருந்த திருவுருவப்படமும் நடுவில் வைக்கப்பட்டு வீரவணக்க நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தேசியத் தலைவர் உள்ளிட்ட அவரது குடும்பத்தினரான மதிவதனி, சார்ள்ஸ் அன்ரனி, துவாரகா, பாலச்சந்திரன் ஆகிய ஐவருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் இந்நிகழ்வு வேலுப்பிள்ளை மனோகரன் குடும்பத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில், டென்மார்க் மற்றும் லண்டன், கனடா உள்ளிட்ட ஐரோப்பிய நாடு கள் பலவற்றில் இருந்தும் பொதுமக்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் எனப் பெருமளவானவர்கள் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.