(மாதவன்)
அரசதலைவரின் வடமாகாண வருகை தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெற்றது.
பாதுகாப்பு பிரிவினர், பொலிஸார், மாவட்ட செயலர் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் பலரும் இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டனர்.
அரசதலைவரால் வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள திட்டங்களுக்கு பொறுப்பான துறைசார் அதிகாரிகளின் கடமைகள் பாதுகாப்பு நடைமுறைகள் நிகழ்ச்சி நிரல் திட்டமிடல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.