மலையகத்தில கனகாலமா ஆடப்படுற காமன் கூத்தில எரிஞ்ச கட்சி. எரியாத கட்சி எண்டு ரண்டு குரூப் வரும். சிவபெருமானுக்கு காதல் உணர்வு வரப்பண்ண காமன் மலரம்பு விடுவான். ஆனால் சிவனுக்கு கடும் கோபம் வந்திடும். அந்தாள் நெற்றிக்கண்ணைத் திறக்க காமன் எரிஞ்சு சாம்பலாப்போடுவான். இந்தக் கட்டம் காமன் கூத்தில வரேக்க. ஒரு குரூப் ' காமன் எரிஞ்சிட் டான்' எண்டும், இன்னொரு குரூப் காமன் எரியேலை எண்டும் பாட்டுப்பாடி சண்டை பிடிப்பினம். அவையத்தான் எரிஞ்ச கட்சி. எரியாத கட்சி எண்டு சொல்லுறவை. 2009ஆம் ஆண்டுக்குப் பிறகு, நாங்களும் இப்பிடி ரண்டு கட்சியாப் பிரிஞ்சு நிக்கிறம். ஒரு குரூப் தலைவர் இருக்கிறார்' எண்டுது. எதிர்க்கன்னையோ தலைவர் இல்லை எண்டு சொல்லுது. இந்த ரண்டு குரூப்புக்களுக்கும் நடுவில மாட்டுப்பட்டு சனம் முழியா முழிக்குது.
முள்ளிவாய்க்காலில ஆமிக்காரர் தலைவர் எண்டு சொல்லி ஒரு உடம்பை காட்டினவை. ஆனால் அந்த உடம்பில கனக்கச் சந்தேகம் சனத்துக்கு. அவர் செத்து கனநேரத்துக்குப் பிறகுதான் உடம்பை எடுத்த தெண்டு ஆமி சொன்னது. அப்பிடி எண்டால் உடம்பு விறைச்சுப் போயிருக்கும். ஆனால் ஆமிக்காரர் காட்டின உடம்பில தலை ஒரு பக்கம் சரியுது. கைகால் அங்கையும், இஞ்சையும் எண்டு இழுபடுகுது. அதோட இவ்வளவு உயிர்போற சண்டைக்குள்ளையும் தலைவர் சேவ் எடுத்து. 'டை' அடிச்சு நிண்டவரோ எண்டும் சனத்துக்கு டவுட். அதைவிடப் பெரிய டவுட், அது உண்மையாவே தலைவரின்ர உடம்பெண்டால் ஆமிக்காரர் ஒரு மாதத்துக்கு அந்த உடம்பை இலங்கை முழுக்க ஊர்வல மாக் கொண்டுபோய் எழுப்பம் காட்டியிருப்பினம். சண்டையளில எடுக்கிற இயக்கக்காரரின்ர வித்துடல் களையே அப்பிடிக் கொண்டு போய் காட்டி பெருமைப்படுற ஆக்கள், தலைவரின்ர உடம்பு கிடைச்சா சும்மா இருப்பினமோ? ஆனால் உடனேயே அவை அதை எரிச்சுப் போட்டினமாம் எண்டு சொல்லுறதை ஆர்தான் நம்புவினம். அதைவிட, இன்னும் தலைவர் செத்திட்டார் எண்டு அரசாங்கம் மரணச் சான்றுதழும் குடுக்கேலை.
இந்த விசயங்களால சனம் 'தலைவர் உயிரோட எங்கையோ இருக்கிறார் எண்டு நம்பிக்கொண்டிருக்கு. ஆனால் இந்த நம்பிக்கையை சிலர் தங்களுக்குச் சாதகமாகப் பாவிச்சு காசு, கார், வீடு. வளவு. சொத்து, சுகம் எண்டு வெளிநாடுகளில அனுபவிச்சுக் கொண்டிருக்கினம். அதே கோஷ்டிதான் தலைவரின்ர மகள் துவாரகா உயிரோட இருக்கிறா எண்டு ஆரையோ கொண்டந்து யூரிப்பில காட்டினவை. ஆனால் அது துவாரகா இல்லை எண்டு எல்லாருக்கும் பார்த்த உடனேயே விளங்கினதால்,அந்தத் திட்டம் பெயிலியராப் போட்டுது. ஆனாலும் தலைவர் இருக்கிறார், கெதியில வருவார் எண்டு வெளிநாட்டுச் சனத்திட்ட சிலர் இன்னமும் தூண்டில் போட்டு இலாபம் பாக்கினம்.
இதாலையோ என்னவோ, இந்தமுறை தலைவருக்கு வீரவணக்கம் செய்யப்போறம் எண்டு, தேசியத் தலைவரின்ர அண்ணை அறிவிச்சிருக்கிறார். அவருக்குக் கூட தன்ர தம்பி உயிரோட இருக்கிறாரா இல்லையா எண்டும் தெரியாமல் இருக்கலாம். ஆனால் தலைவரையும், அவற்றை குடும்பத்தையும் பாவிச்சு சிலர் செய்யிற உதவாத வேலையளைப் பார்த்து மனம் வெம்பித்தான் இப்பிடியொரு முடிவை அவர் எடுத் திருக்கிறார். கடவுள் இருக்கிறாரா இல்லையா எண்டு ஆராயிறதைவிடவும். கடவுளின்ர பேருக்கு களங்கம் வராமல் பாக்கிறதுதான் அந்தக் கடவுளுக்குச் செய்யிற கைமாறா இருக்கும். அதை எங்கட சனம் எப்ப செய்யும்?
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.