(ஆதவன்)
தென்னிலங்கையில் நிலவும் தொடர் மழையுடனான காலநிலை வடக்கு மாகாணத்தில் இன்று தொடக்கம் எதிர்வரும் புதன்கிழமை வரையில் நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட இலங்கை நிலப்பரப்பை அண்மித்து நீடிக்கும் வளிமண்டல குழப்பமானது இன்று முதல் யாழ்ப்பாணத்தை அண்டிய கடற்பரப்பில் காற்று சுழற்சியாக வலுப்பெறுவதற்கு சாதகமான சூழல் உருவாகியுள்ளது.
இதனால் தற்போது தென்னிலங்கை உட்பட கொழும்பு, புத்தளம் மாவட்டங்கள் மற்றும் மலையகத்தில் நிலவும் தொடர் மழையுடன் கூடிய காலநிலை வடக்கிலும் பரவலடையும் சாத்தியம் நிலவுகிறது.
இன்று பிற்பகல் முதல் நாளை மறுதினம் புதன்கிழமை வரையான 48 மணிநேரங்கள் வடக்கு மாகாணம் முழுவதும் கனமழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன என வானிலை எதிர்வுகூறல் வெளியிடப்பட்டுள்ளது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.