போராட்டத்தில் ஈடுபடத் தீர்மானம்!
(புதியவன்)
சுகவீன விடுமுறையை கோரி தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாகஇலங்கை சிறைச்சாலை அதிகாரிகள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.
இருபத்தையாயிரம் ரூபா சம்பள அதிகரிப்பைக் கோரி இன்று முதல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும், இதனால் முழு பல்கலைக்கழக அமைப்பும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பேராதனை பல்கலைக்கழக தொழிற்சங்க பேரவையின் பொதுச் செயலாளர் டி சுரஞ்சீவ தெரிவித்துள்ளார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.