(ஆதவன்)
வற்றாப்பளை கண்ணகியம்மனின் பொங்கலுக்காகச் சென்று கொண்டிருந்த உழவியந்திரம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து தடம் புரண்டதில் 16 வயதுச் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.
புதுக்குடியிருப்பு, மூங்கிலாற்றில் நேற்று மாலை இடம்பெற்ற இந்த விபத்தில், தருமபுரம், உழவனூரைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மிதுசிகன் (வயது-16) என்ற சிறுவனே உயிரிழந்துள்ளான்.
இந்த விபத்தில் உழவியந்திரத்தில் பயணித்த மேலும் 6பேர் படுகாயங்களுடன் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.