(புதியவன்)
எல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெமோதர நெதர்வில்லில் இரு குழுக்களுக்கிடையே நேற்று இரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
38 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இரு குழுக்களுக்கிடையில் நீண்ட காலமாக நிலவி வந்த வாக்குவாதம் நேற்று இரவு மோதலாக மாறியதாகவும் அதில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட சவள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் இருவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் தெமோதர கிராமிய மருத்துவமனையின் பிண அறையில் வைக்கப்பட்டுள்ளது.
நீதிவான் பரிசோதனையின் பின்னர் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக பதுளை போதனா மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.