சோழியன் குடுமி சும்மா ஆடாது உந்த அமெரிக்கத் தூதுவராயிருக்கிற ஜூவி சங்கும் தேவையில்லாமல் இஞ்ச வந்து போகமாட்டா. அப்பிடி வந்து போனால் அதுக்குப் பின்னால் ஏதோ ஒரு பெரிய சம்பவம் நடக்கப் போகுதெண்டதுதான் அர்த்தம். ஜூலி சங்கின்ர பதவிக்காலம் முடியிறதால, ஒரு பிரியாவிடை மாதிரி அவா யாழ்ப்பாணத்துக்கு போனகிழமை வந்தவா. சிவில் அமைப்புக்காரர், அரசியல்வாதியன் எண்டு தெரிஞ்செடுத்த சிலரோட கதைச்சும் பேசினவா, சிவில் அமைப்புகளிட்ட தமிழ்ப் பொதுவேட்பாளர் பற்றித்தான் குடைஞ்சு குடைஞ்சு கேட்டிருக்கிறா.அவையும் பொது வேட்பாளரை நிப்பாட்டினா என்னென்ன லாபங்கள் தமிழருக்கு இருக்கெண்டு விலாவாரியாச் சொல்லியிருக் கினம். அவை சொன்னதையெல்லாம் கடும் ஆர்வமாக் கேட்டுத் தலையாட்டியிருக்கிறா.
அதுக்குப் பிறகு அவா சிறீதரன், சித்தார்த்தன், சார்ள்ஸ் எண்ட மூண்டு எம்.பி.மாரையும் கதைக்கக் கூப்பிட்டிருக்கிறா. போன மூண்டு பேரும் அவாக்கு முன்னால ரண்டு கன்னையாப் பிரிஞ்சிட்டினம். சிறீயரும், சித்தரும் பொதுவேட்பாளரை நிப்பாட்டத்தான் வேணுமெண்டு சொல்லியிருக்கினம். ஆனால் சார்ள்ஸ் இதுக்கு எதிராச் சொல்லியிருக்கிறார். இவை ரண்டு கன்னையா பட்டிமன்றம் நடத்த, அதைக் கொடுப்பக்க சிரிச்சபடி ஜூலி சங், தமிழாக்களின்ர ஒற்றுமையின்ற சீத்துவம் என்ன எண்டதைக் கண்ணாரக் கண்டிருப்பா.
அதாலையோ என்னவோ, விசயத்தை மாத்த வெளிக்கிட்டு, 'சரி. உங்கட தமிழரசுக் கட்சி பிடுங்குப் பாடுகள் எல்லாம் என்ன மாதிரி? எதுக்கு பதவி, வழக்கு எண்டு பிரிஞ்சு நிக்கிறியள்? நீங்கள் இப்பிடி ஆளுக் கொரு திசையில பிரிஞ்சு நிக்கிறதைப் பாக்க எங்களுக்கெல்லோ கவலையாக் கிடக்கு. ஒற்றுமைப் பட்டு நிக்கிற நேரத்திலபோய் இப்பிடி பிரிஞ்சு நிக்கிறது. சரியா?' எண்டு அக்கறையா ஜூலி சங் கேட்டிருக்கிறா. ஆனால் நல்லவேளையா இந்தவிசயத்தில் சிறீயர் அவாவுக்கு பிடிகுடுக்கேலை.
'பிரச்சினையள் இருக்குத்தான். ஆனால் அதுகளை இதிலை கதைக்கமுடியாது. என்னதான் இருந்தாலும் சித்தார்த்தன் வேறசுட்சி, வேற ஒரு சந்தர்ப்பத்தில் அதைப்பற்றிக் கதைப்பன். அப்பிடிக் கதைக்கேக்க இந்த வழக்கு, பிரச்சினை, பிளவுகளுக்கெல்லாம் திரைக்கதை, வசனம், டைரக்சன் எல்லாம் ஆரெண்டு வடிவாச் சொல்லுறன்' எண்டு சிறீயர் சிரிச்சுக்கொண்டே சொல்லியிருக்கிறார். அதைக்கேட்டிட்டு ஜூலி சங்கும். 'எனக்கு எல்லா விசயமும் தெரியும்' எண்ட கணக்கில ஒரு மார்க்கமாச் சிரிப்பிலையே பதிலைச் சொல்லிட்டாவாம்.
என்னதான் பிரியாவிடைக்கு ஜூலி சங் யாழ்ப்பாணம் வந்தாலும், பொதுவேட்பாளர், தமிழரசுக் கட்சியின்ர உள்வீட்டுப் பிரகண்டங்கள் பற்றி என்னத்துக்கு விடுத்து விடுத்துக் கேக்க வோணும் ? ஏனெண்டால், பொதுவேட்பாளர் விசயம் அமெரிக்காவுக்கு அவ்வளவாப் பிடிப்பில்லையாம். அதால தமிழரசுக் கட்சியில் உள்ள பிரச்சினையை வைச்சு, அவையை இந்த விசயத்திலயும் ரண்டா அடிபடவிட்டால், அப்பிடியே பொது வேட்பாளரை நிப்பாட்டிறதில் ஒற்றுமை இல்லையேண்ட மாதிரி சனத்தை நம்பப்பண்ணலாம். அதுக்குத்தான் ஜூலி சங் நாடி பிடிச்சுப் பார்த்திருக்கிறாபோல, ஆணால் பாவம், அவா இப்பிடியெல்லாம் கஷ்டப்படாமலே, எங்கட ஆக்கள் பொதுவேட்பாளரை நிப்பாட்டுறதோ, இல் லையோ எண்டதில அடிபடத் தொடங்கிட்டிணம். நேற்றையான் தமிழரசுக் கட்சியின்ர மத்தியகுமுக் கூட்டம் அதுக்கு நல்ல உதாரணம். அதைப் பற்றி பிறகு கதைப்பம்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.