(யோகி)
இலங்கை அரசாங்கத்துக்கு உலக நாடுகள் அழுத்தம் கொடுத்திருந்தாலும் நாங்கள் பன்னாட்டு ரீதியிலான விசாரணையையே எதிர்பார்க்கிறோம். இம்முறை எமக்கான தீர்வை தருவார்கள் என நம்பியிருக்கிறோம் என வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க தலைவி யோ.கனகரஞ்சினி தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பன்னாட்டு மன்னிப்புச் சபையின் செயலாளரை சந்தித்தது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர் இங்கு இனப் படுகொலை தான் நடந்தது என்பது முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை பார்வையிட்ட பின்னார் தான் அவருக்கு புரிந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
ஒட்டு மொத்த தமிழ் இனமும் அடக்குமுறைக்குள் தான் வாழ்ந்து வருகிறது. எமக்கான தீர்வு கிடைக்க வேண்டுமெனில் பன்னாட்டு சமூகம்தான் தீர்வை தர முன் வரவேண்டும். இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட பல்வேறு ஆணைக்குழுக்களை சந்தித்தும் தீர்வு எட்டப்படவில்லை. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடனோ அரச தலைவருடனோ பேசுவதற்கு தயார் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.(ஞ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.