(புதியவன்)
மருத்துவ வரலாற்றில் ஒரு கருவில் நான்கு குழந்தைகளை தாய் ஒருவர் பிரசவித்துள்ள சம்பவம் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு புதுக்குடியிருப்பை சேர்ந்த கரிகரன் கிருஸ்ணவேணி என்பவரே இந்த குழந்தைகளை பிரசவித்துள்ளார்.
மருத்துவத்துறையின் வரலாற்றில் இயற்கை முறையில் இவ்வாறு கருத்தரிப்பது அரிதாகவே காணப்படுவதாக மட்டக்களப்பு போதனா மருத்துவமனையின் மகப்பேற்று மருத்துவ நிபுணர் மருத்துவர் சரவணன் தெரிவித்துள்ளார்.
ஒரே கருவில் நான்கு குழந்தைகள் இயற்கையாக கருத்தரித்து சுகப்பிரசவமாக நான்கு குழந்தைகளை தாய் பிரசவித்தமை மருத்துவதுறையில் மிகவும் அரிதான விடயமாக பார்க்கப்படுவதுடன் நான்கு குழந்தைகளும் மிகவும் ஆரோக்கியமாக உள்ளதாகவும்மட்டக்களப்பு போதனா மரத்துவமனையின் மகப்பேற்று மருத்துவ நிபுணர் மருத்துவர் சரவணன் தெரிவித்துள்ளார்.(ஞ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.