(புதியவன்)
நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் (22) நேற்று புதன்கிழமை மதியம் திடீரென கடல் நீர் உள் வாங்கப்பட்டுள்ளது.
(22) புதன்கிழமை அதிகாலை முதல் மன்னார் மாவட்டத்தில் பலத்த காற்று வீசி வருகின்ற நிலையில் நேற்றைய தினம் காலை மீனவர்கள் கடற்தொழிலுக்கு செல்லவில்லை.
இந்த நிலையில் வங்காலை வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் நேற்று மதியம் திடீரென கடல் நீர் உள் வாங்கிய தோடு,கடற்கரையில் கட்டப்பட்டிருந்த படகுகள் மற்றும் வலைகள் நீரில் மிதந்தது எனினும் படகுகளுக்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என மீனவர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் வங்காலை பங்குத்தந்தை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அப் பகுதிக்குச் சென்று நிலமையை பார்வையிட்டதோடு,உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.