(மாதவன்)
யாழ்ப்பாணப் பெட்டகம், நிகலுருக்கலைக்கூடம் , உலக பண்பாட்டுத்தினத்தை முன்னிட்டு, யாழ் மண்ணே வணக்கம் என்னும் கருப்பொருளிலான செயற்றிட்ட அறிமுக விழா நேற்று (22.05.2024) யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலுக்கு அண்மித்த சரஸ்வதி மண்டத்தில் இடம்பெற்றது.
இதில் யாழ்ப்பாண பண்பாட்டினை பறைசார்ற்றும் யாழ். மண்ணே வணக்கம் என்னும் கருப்பொருளிலான செயற்றிட்ட கைந்நூல் வழங்கலும், பாடல் இசைத்தட்டும் யாழ்ப்பாண பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பொ.பாலசுந்தரம் பிள்ளை வெளியிட்டு வைக்க இதில் முதற் பிரதியை ,யாழ்ப்பாணப் பெட்டகம் நிறுவகத்தின் ஸ்தாபகர் திருமதி விஜிதா பாலதாஸ் அதனை பெற்றுக்கொண்டார்.
இதனை தொடர்ந்து ஏனைய அதிதிகளுக்கும், சிறப்பு விருந்தினர்களுக்கும் கைந்நூல்களும், இறுவெட்டுகளும் வழங்கி வைக்கப்பட்டன.
யாழ் மாவட்டத்தில் இருந்து வடமாகாண முழுவதும் சமூக அக்கறை கொண்டு மகத்தான பணிகளை முன்னெடுத்து வரும் சமூக நல்லுள்ளங்களுக்கான விருதுகளும், மதிப்பளிப்பும் வழங்கப்பட்டது.
இதில் யாழ் பல்கலைக்கழக வாழ்நாள் போராசிரியர்களாகிய கலாநிதி ம.கிருஷ்ணராஜா, சண்முகலிங்கன், மற்றும் சமூக நலன்விரும்பிகள், கலைஞர்கள் பலரும் கலந்துகொண்டனர்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.