(புதியவன்)
சிறிலங்கா அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக நாளை வடக்குக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
3 நாட்கள் பயணமாக வடக்குக்கு வரும் அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணம், முல்லைத்தீவு,கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் உரித்து தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் காணி உரிமங்களை வழங்கி வைக்கவுள்ளதுடன் வடக்கில் இளைஞர்களுடன் சந்திப்பொன்றிலும் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் பயிற்சிப் பிரிவொன்றை திறந்து வைக்கவுள்ளதுடன் கிளிநொச்சி மருத்துவமனையில் பெண்கள் சுகாதார பிரிவொன்றும் அரச தலைவரால் திறந்து வைக்கப்படவுள்ளது.
இதேவேளை வவுனியா மாவட்ட மருத்துவமனையில் இதய நோய் பிரிவும் மாங்குளம் ஆதார மருத்துவமனையில் புதிய விடுதியொன்றும் அரச தலைவரால் திறந்து வைக்கப்படவுள்ளதுடன் யாழ்ப்பாணத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்விலும் பங்கேற்கவுள்ளார். (ஞ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.