(புதியவன்)
தியத்தலாவ ஹப்புத்தளைக்கு இடையிலான தொடருந்துப் பாதையில் இன்று (23) காலை பாரிய மரம் முறிந்து வீழ்ந்ததால் பதுளைக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையிலான தொடருந்து சேவை தடைப்பட்டுள்ளதாக தொடருந்து பணிமனை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக இன்று (23) காலை பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த உடரட மனிகே தொடருந்து பண்டாரவளை தொடருந்து நிலையத்திலும், கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணிக்கும் இரவு அஞ்சல் தொடருந்து ஹப்புத்தளை தொடருந்து நிலையத்திலும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையுடன் தொடருந்து பாதையில் மரங்கள் வீழ்ந்துள்ளதுடன் தியத்தலாவ இராணுவ முகாம் அதிகாரிகள் தொடருந்துப் பாதையில் விழுந்த மரங்களை வெட்டி அகற்றி வருகின்றனர். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.