(செல்வன்)
நாடெங்கிலும் இன்று பௌத்தர்களின் புனித நாளான வெசாக் பௌர்ணமி தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாங்குளம் பொலிஸ் நிலையத்துற்கு முன்பாக இன்றைய தினம் பொலிஸாரால் பொது மக்களுக்கு குளிர்களி வழங்கப்பட்டது.
இன்று காலை 10.30 மணிக்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இரண்டு அசோக பெரேரா மற்றும் மாங்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நீல் கிரிந்தே உள்ளிட்ட அதிகாரிகளால் குளிர்களி வழங்கல் ஆரம்பித்து வைக்கப்பட்டதை தொடர்ந்து ஏ_9 பிரதான வீதியூடாக செல்கின்ற பயணிகள் மற்றும் மாங்குளம் கிராம மக்கள் என பலருக்கும் குளிர்களி வழங்கப்பட்டது.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.