(புதியவன்)
புபுரஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயது தந்தையும் 17 வயதான மகனும் மின்பிறப்பாக்கி இயக்கிவிட்டு உறங்கச் சென்ற இருவரும் திடீரென உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இ்ச் சம்பவம் இன்று (23) வியாழக்கிழமை இடம்பெற்றது.
இவர்கள் இருவரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு வெசாக் தானம் வழங்க ஏற்பாடு செய்துகொண்டிருக்கும் போது திடீரென அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளமையால் இதனையடுத்து, இவர்கள் இருவரும் அறையொன்றிலிருந்த மின்பிறப்பாக்கியை இயக்கிவிட்டு உறங்கச் சென்றுள்ளனர் மறுநாள் காலை இருவரும் எழுந்திருக்காததால் இது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் அறையிலிருந்த மின்பிறப்பாக்கி இயங்கியதால் அதிலிருந்து வெளியேறிய ஒருவித நச்சுத்தன்மைமிக்க வாயு காரணமாக இவர்கள் இருவரும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புபுரஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.