(செல்வன்)
கௌதம புத்தரின் பிறப்பு, ஞானம் பெறல் மற்றும் பரிநிர்வாணத்தை நினைவு கூரும் பௌத்தர்களின் புனிதமான நாளான வெசாக் தினம் முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் புதுக்குடியிருப்பு பிரதேசசபை மைதானத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டிருந்தது.
நிகழ்வில் புத்த பெருமானின் பரிநிர்வாணத்தை நினைவுகூரும் வரலாற்று கதைகள் வெளிச்ச வீடுகளில் தமிழ் மொழியில் ஒலி மூலம் வெளிப்படுத்தப்பட்டதோடு, சில வெளிச்ச வீடுகளில் தமிழ் பக்தி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டிருந்ததோடு நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டிருந்தது.
நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டச்செயலர் அ.உமாமகேஸ்வரன் இராணுவ தளபதிகள் சமூகமட்ட அமைப்புக்களின் பிரமுகர்கள், வர்த்தக பிரமுகர்கள் சிறுவர்கள், பெரியோர்கள் என பலரும் கலந்து கொண்டு வெசாக்கை கொண்டாடியிருந்தனர்.
வெசாக்கை முன்னிட்டு (23) இன்றும், (24) நாளையும் உணவு வழங்கும் நிகழ்வு இடம்பெற இருப்பதும் குறிப்பிடத்தக்கது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.