இந்தியாவில இருந்துகாங்கேசன்துறைக்கு கப்பல் ஓடுறதும் பிள்ளையாரின்ர கலியாணமும் நடந்த மாதிரித்தான். போனவருசமும் பெரும் இழுபாட்டுக்குப் பிறகுதான் 'செரியாபாணி' எண்ட படகு கொஞ்சநாள் நாகைப்பட்டினத்துக்கும், காங்கேசன்துறைக்கும் இடையில ஓடினது. பிறகு மாரி மழை முடியத்தான் 'செரியாபாணி' ஓடுமெண்டு நிப்பாட்டினவை. ஆனால் மழை விட்டு ஒரு மாதங் கடந்தும் செரியாபாணியைப் பற்றி ஒருகதையும் இல்லை. உந்த ரீவி நாடகங்களில அவருக்குப் பதில் இனி இவர் எண்டமாதிரி செரியாபாணிக்கு பதிலா இன்னொரு கொம்பனியால, வேற ஒரு படகு ஓடும் எண்டு அறிவிச்சு. அதுக்கு முன்பதிவும் செய் தவை. இப்ப அந்தப் படகும் ஓடுற சிலமனைக் காணேலை. எப்பிடி செரியாபாணியை 'இண்டைக்கு ஓடும், நாளைக்கு ஓடும்'எண்டு பேய்க்காட்டிச் சினமோ அதே கதைதான் இதுக்கும் நடக்குது. உந்தப்படகை ஓடுறதில அப்பிடி என்னதான் இழுபாடு இருக்கோ தெரியேலை. அதைவிட ஏன் செரியா பாணியை நிப்பாட்டி புதுப் படகைக் கொண்டந்தவை எண்ட கேள்விக்கும் இன்னும் விடையில்லை.
கப் பல் ஓடப்போறம் எண்டிட்டு சுற்றுலாப் படகை ஓட விடேக்கையே உதுக்குள்ள ஏதோ ஒரு சிக்கல் எண்டு எல்லாருக்கும் விளங்கினது. ஆனால் அந்தச் சிக் கல் என்ன எண்டது மட்டும் தான் விளங்குதில்லை. 'இந்தியாவுக்கு கப்பல் ஓடப்போகுதாம்' எண்ட கதை வந்த உடனேயே எங்கட சனம், ஏதோ பென்னம் பெரிய கப்பல் ஓடப்போகுதெண்டுதான் நினைச்சவை. சண்டைக்காலத்துக்கு முதல் 1984 ஆம் ஆண்டு வரைக்கும் தலைமன்னாரில் இருந்து ராமேஸ்வரம் வரைக்கும் 'ராமானுஜம் படகுச் சேவை' ஓடினது, அதுவும் 350 பேரை ஏத்தக்கூடிய படகுதான். முந்தி ஒரு விசேசம் என்னவெண்டால், எங்கட நாட்டு ரயில்வே ஸ்ரேசனிலயே இந்தியா வின்ர எந்த இடத்துக்கும் ரெயின்ல போக ரிக்கெற் எடுக்கலாம் எண்டதுதான். உதாரணமா ஒராள் யாழ்ப்பாணம் ரெயில்வே ஸ்ரேசனிலயே டெல்லிக்குப் போற ரெயினுக்கும் இஞ்சையே காசைக் கட்டி ரிக்கெற்றை எடுத்துக்கொண்டு. படகுக் காசு 150 ரூபா கட்டி ராமானுஜம் படகில போய் இராமேஸ்வரத்தில இறங்கி. அப்பிடியே ரிக்கெற்றை காட்டி ரெயின்ல ஏறி டெல்லிக்குப் போகலாம். அப்பவே அப்பிடியெல்லாம் இருக்க, இப்ப கப்பல் ஓடப்போறம் எண்டிட்டு 1984 ஆம் ஆண்டு ஓடினமாதிரி ஒரு படகைத்தான் ஓட விட்டவை. அதோட அந்தப் படகு தூர ஓட்டத்துக்கு பெரிசா நிண்டு பிடிக்காது.
செரியாபாணியோட ஒட்டிப் பிறந்த மாதிரி ஒரு படகை ரண்டு வருசத்துக்கு இலங்கை நேவி காங்கேசன்துறையில கொண்டந்து ஓடவிட்டது. காங்கேசன்துறையில இருந்து நெடுந்தீவு மட்டும் சுற்றுலா போற ஆக்கள் காசு கட்டிப் போகலாம் எண்டு வெள்ளோட்டமெல்லாம் விட்டவை. ஆனால் பிறகு அதையும் காணேலை. பேந்து பார்த்தால் அந்தப் படகை உரிச்சு வைச்சமாதிரி செரியாபாணி இந்தியாவில இருந்து வந்திச்சு. பிறகு 'மழைக்குள்ள ஓடினால் கரைஞ்சு போடும்' எண்டு நிப்பாட்டினதோட சரி. ஆனால் இப்பிடி உந்தப் படகுகள் ஓடாமல் இழுத்தடிக்கிறதுக்குப் பின்னால சில 'பிளேன்' ஓடுற கொம்பனியள் இருக்கெண்டும் ஒரு கதை அடிபடு குது, படகு ஓடினா அவையின்ர யாவாரம் இல்லாமல் போடுமெல்லோ. அதுக்குத்தான் இப்பிடி ஓட விடாமல் பாக்கினமாம். எல்லாம் கடலுக்குத்தான் வெளிச்சம்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.