(ஆதவன்)
கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்துக்கு முன்பாக அண்மையில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த நபர் சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். மாந்தோப்பு வட்டக்கச்சியைச் சேர்ந்த தம்பிராசா ரவிச்சந்திரன் (வயது-35) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த அவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சையின்போது நேற்று உயிரிழந்துள்ளார். இறப்பு விசாரணைகளை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி ந.பிறேம்குமார் மேற்கொண்டார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.