(புதியவன்)
தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா- ராகலையில் இன்று வெள்ளிக்கிழமை(24) காலை மரம் முறிந்து வீழ்ந்ததில் குடும்பத்தலைவர் உயிரிழந்துள்ளதாக ராகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடும் காற்ரால் மரம் சரிந்து விழுந்துள்ளதாகவும் இறந்தவர் கந்தப்பளை ஹைபோரஸ்ட் இலக்கம் ஒன்றில் வசித்து வரும் ஒரு பிள்ளையின் தந்தையான 38 வயதுடைய கந்தசாமி ராஜ்குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.