(மாதவன்)
நாட்டில் கடந்த சில வாரங்களாக நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்தில் 7 குடும்பங்களை சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,
சீரற்ற காலநிலையால் நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் ஜே/125 கிராம அலுவலகர் பிரிவில் இரண்டு குடும்பங்களைச் சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
ஜே/191 கிராமஅலுவலகர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் வேலணை பிரதேச செயலர் பிரிவில் ஜே/33 கிராம அலுவலகர் பிரிவில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் ஜே/26 மற்றும் ஜே/21 கிராமஅலுவலகர் பிரிவுகளில் இரண்டு அடிப்படை கட்டமைப்புக்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன எனவும் தெரிவித்தார்.
மேலும் தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவிவில் ஜே/232 கிராம அலுவலகர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.
யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் ஜே/66 மற்றும் ஜே/263 கிராம அலுவலகர் பிரிவுகளில் தலா ஒவ்வொரு குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ள அதேவேளை கொக்குவில் மேற்கு பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக வீட்டிற்கு மேல் பனைமரம் முறிந்து விழுந்ததில் வீட்டுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் யாழ்ப்பாணத்தில் 19.7 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்றார் .(ஞ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.