வடக்கு மாகாணத்திற்கான மூன்று நாள் பயணத்துக்கா அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்க சற்றுமுன்னர் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார்.
உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் வந்திறங்கிய அரசதலைவரை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் வரவேற்றனர்.
அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்க யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட கட்டிடத்தை திறந்துவைக்கவுள்ளதுடன், துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ள இளைஞர் சேவை மன்ற நிகழ்வு மற்றும் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெறவுள்ள ஆசிரியர் நியமன நிகழ்விலும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரசதலைவரின் பயணத்தையொட்டி யாழ் நகர் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.