எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை!
(புதியவன்)
சட்டவிரோதமாக மலேசியாவுகுச் சென்ற ஆயிரத்து 608 இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக மலேசியாவிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
மலேசியாவிலுள்ள இலங்கைதூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் 1ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் 30ஆம் திகதி வரையான இரு மாத காலத்தில் இந்த ஆயிரத்து 608 பேரும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மலேசிய அரசின் புலம்பெயர்ந்தோரைத் திருப்பி அனுப்பும் திட்டத்துக்கமைய இவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(ஞ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.