வானூர்திப்படையின் சிறப்பு அறிவிப்பு!
(புதியவன்)
சீரற்ற வானிலையால் நீர்ப்பாசனத் பணிமனை திடீர் வெள்ளப்பெருக்கு எச்சரிக்கையை விடுத்துள்ள நிலையில் மூன்று உலங்கு வானுர்திகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக வானூர்ப்ப்படை தெரிவித்துள்ளது.
அவசர நிலை தொடர்பில் தகவல் கிடைத்ததும் இந்த உலங்கு வானுர்திகள் மீட்புப் பணிகளுக்காக அனுப்பி வைக்கப்படும் என வானூர்ப்ப்படை ஊடகப் பேச்சாளர் துஷான் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
கட்டுநாயக்க இரத்மலானை மற்றும் ஹிகுராக்கொட வானூர்ப்ப்படை தளங்களில் இந்த உலங்கு வானுர்திகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் இதற்காக இரண்டு பெல் 212 வானூர்திகளும் எம்.ஐ 17 வானூர்தியும் தயார் செய்யப்பட்டுள்தாகவும் வானூர்ப்ப்படை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
பேரிடர் மேலாண்மை மையத்தின் அறிவிப்புக்கமைய மீட்பு பணிகளுக்காக வானூர்திகள் தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.(ஞ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.