(புதியவன்)
கஞ்சி வழங்கினால் பரிசோதிக்க வரும் சுகாதார பரிசோதகர்களை வெசாக் தன்சல்களில் காணமுடியவில்லை என செல்வராஜா கஜேந்திரன் முகநூல் பதிவொன்றில் பதிவிட்டுள்ளார்.
அதில் "தமிழ் மக்கள் கஞ்சி கொடுத்தால் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். ஆனால் பொலிஸாரும் இராணுவமும் குளிர்களி கொடுக்கலாம்.
கஞ்சி வழங்கினால் இன நல்லிணக்கம் குழம்புமென தடை விதிக்கும் மன்றங்கள் சிங்களவர்கள் வசிக்காத வடக்கு கிழக்கில் வெசாக் கொண்டாடினால் இனநல்லிணக்கம் பாதிக்கப்படுமென தடை விதிக்கவில்லை.
கஞ்சி வழங்கினால் பரிசோதிக்க வரும் சுகாதார பரிசோதகர்களை வெசாக் தன்சல்களில் காணமுடியவில்லை.
வீதியோரமாக அனுமதியின்றி ஒரு சிறு வியாபாரியால் கடை போட முடியாது. ஆனால் இராணுவத்தினரால் அனுமதியின்றி ஆரிய குளத்தில் வெசாக் கூடுகளை கட்ட முடியும்.
தமிழ் மக்களுக்கு ஒரு நியாயம். சிங்களவர்களுக்கு இன்னொரு நியாயம்.
நம்புங்கள்.... இலங்கை ஜனநாயக நாடு. இங்கு சட்டத்துக்கு முன் அனைவரும் சமம்" என்றுள்ளது.(ஞ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.