(புதியவன்)
சீதுவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீர்கொழும்பு - கொழும்பு வீதியில் லியனகேமுல்லவில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக சீதுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தானை பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயது நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நீர்கொழும்பிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த உந்துருளி ஒன்று வீதியில் பயணித்த பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த பாதசாரி விஜய குமாரதுங்க மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்தாகவும் உயிரிழந்தவரது சடலம் விஜய குமாரதுங்க மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து உந்துருளியின் சாரதி சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை சீதுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(ஞ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.