(புதியவன்)
நாடு கடந்த தமிழீழ அரசின் தலைமை அமைச்சராக விசுவநாதன் உருத்திரகுமாரன் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாடு கடந்த தமிழீழ அரசின் நான்காவது தவணைக்காலத்தின் முதலாவது அமர்வு கடந்த மே 17, 18, 19 ஆம் திகதிகளில் அமெரிக்காவில் நடைபெற்றது. இதன்போது அரசாங்கத்தின் பிரதிநிதிகள் நேரடியாகவும் இணையம் மூலமாகவும் பங்கேற்றிருந்தனர்.
முதல்நாள் அமர்விலேயே அரசவைத் தலைவர், உதவி அரசவைத் தலைவர் மற்றும் தலைமை அமைச்சருக்கான தெரிவு நடைபெற்றது.
மொத்தமாகத் தெரிவு செய்யப்பட்ட 91 பிரதிநிதிகள் அடங்கிய அரசவையிலிருந்து முதலாவது அரசவை அமர்வில் 68 பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். மேலும், புலம்பெயர் நாடுகளில் இருந்து பல அரசவை உறுப்பினர்கள் நேரடியாக பங்கேற்றுள்ளனர்.
பிரித்தானியா, கனடா, பிரான்ஸ், ஜேர்மனி, அவுஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் மையங்களில் இருந்தும் இணைவழியாக மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.