(மாதவன்)
பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை பல நாடுகள் முன்மொழிந்து வருகின்றன. அதனை ஈழத் தமிழர்கள் ஆகிய நாமும் வரவேற்கின்றோம் என வடக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் இன்று வெளியிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் நடவடிக்கைள் காரணமாக எப்படி பலஸ்தீன காஸா மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனரோ அதே போல ஈழத் தமிழர்களும் சிறிலங்காவின் சிங்கள ஆட்சியாளர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் ஈழத் தமிழர்களுக்கு நீதி வழங்க தயார் இல்லை. உலக நாடுகள் பலவும் பலஸ்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரிக்க முயற்சிக்கும் சம நேரம் ஈழத் தமிழர்களுக்கும் ஒரு தனி தேசமாக அங்கீகரிக்க முன் வரவேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.