(இனியபாரதி)
(24) இன்று பிற்பகல் 2.30 மணியளவில் யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் யாழ்மாவட்டத்தைச் சேர்ந்த 380 பேருக்கான காணி உறுதிப் பத்திரங்கள் அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்கவால் சம்பிரதாயபூர்வமாக வழங்கிவைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் வடக்குமாகாண ஆளுநர் பி்.எஸ்.எம்.சாள்ஸ், கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர்களான தர்மலிங்கம் சித்தார்தன், எம்.ஏ.சுமந்திரன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடக்கு மாகாண தலைமைச் செயலர் எல்.இளங்கோவன், யாழ் மாவட்ட மேலதிக மாவட்ட செயலர் ம.பிரதீபன், உட்பட பலர் கலந்துகொண்டனர்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.