(இனியபாரதி)
தேர்தலில் படுதோல்வியடைந்தும் இன்று ஒரு ஆசனத்துடன் ஆசியாவின் சிறந்த தலைவராக அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க மக்களுக்கு சேவையாற்றுகின்றார் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்தார்.
யாழ். மாவட்டத்தில் அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்கவால் அரச காணிகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார் மேலும் தெரிவிக்கையில்
எமது அரச தலைவர் ஆசியாவில் படித்த ஒரு சிறந்த தலைவர், கடந்த 2020 இல் படுதோல்வியை ஐக்கிய தேசிய கட்சி எதிர்கொண்டது ,கட்சியில் கருத்து வேறுபாடு காரணமாக பலர் எங்களிடம் இருந்து பிரிந்து போன நிலையிலும் நாங்கள் கட்சியினை விட்டு வெளியே போகவில்லை, தேசிய பட்டியலில் தான் நாடாளுமன்றம் சென்றார்,கடந்த காலங்களில் பிழையாக நீங்கள் வாக்களித்ததால் தான் பல பிழையான தலைவர்கள் ஆட்சிக்கு வந்தார்கள், கடந்த கால அரச தலைவர்கள் கோத்தாபய போன்றவர்களால் நாடு சோமாலியாவாக மாறியது, ரணில் விக்கிரமசிங்கவின் பதவியேற்றல் வைபவத்தின் பின்னர் இது என்னுடைய முதலாவது பேச்சு,என குறிப்பிட்டிருந்தார்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.