(மாதவன்)
2024 மே 24 வளிமண்டல பணிமனையின் பிப 1.30 காலநிலை அறிக்கையின் பிரகாரம் தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று நேற்று (மே 24) காலை 05.30 மணியளவில் 15.0°N மற்றும் 88.4°Eக்கு அருகில் மையம் கொண்டுள்ளது. இது தொடர்ந்து வடகிழக்கு திசையில் நகர்ந்து 2024 மே 25 காலை 05.30 மணிக்கு கிழக்கு-மத்திய வங்கக்கடலில் ஒரு சூறாவளி புயலாக குவிய வாய்ப்புள்ளதுடன் அதன்பிறகு, அது வடக்கு நோக்கி நகர்ந்து தீவிர புயலாக அதே பகுதியில் தீவிரமடையும் என்பதுடன் மிக பலத்த காற்று (60-70) kmph, உடன் கடல் கொந்தளிப்பாக இருக்குமென எதிர்வு கூறப்பட்டதன் காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பு கருதி நெடுந்தீவு,அனலைதீவு மற்றும் எழுவைதீவுகளுக்கான கடற்போக்குவரத்துகள் (25) இன்று இடம் பெறமாட்டாது.என யாழ் மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா குறிப்பிட்டுள்ளார்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.