(புதியவன்)
சிறிலங்கா துடுப்பாட்ட வீரர்களான குசல் மெண்டிஸ் மற்றும் பந்து வீச்சாளர் அசித்த பெர்னாண்டோ ஆகியோர் நடைபெறவிருக்கும் ஐ சி சி ஆடவர் ரி20 உலகக் கோப்பையில் பங்கேற்பதற்காக தற்போது அமெரிக்காவில் உள்ள இலங்கை அணியில் இணைந்துள்ளனர்.
இலங்கை தேசிய அணி மே 14 ஆம் திகதி அமெரிக்காவுக்கு புறப்பட்ட போதிலும், இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தினால் நுழைவிசைவு வழங்கப்படாததன் காரணமாக இவர்கள் இருவருக்கும் அணியுடன் பயணிக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வீரர்கள் இருவரும் (22) ஆம் திகதி அமெரிக்கா சென்றடைந்து, வட கரோலினாவில் உள்ள மோரிஸ்வில்லி பயிற்சியைத் தொடங்கியுள்ளனர்.
வனிந்து ஹசரங்க தலைமையிலான 15 பேர் கொண்ட சிறிலங்கா அணியின் வீரர்களும் வரவிருக்கும் பயிற்சி ஆட்டங்களுக்கு அனைத்து வீரர்களும் தகுதியாக இருப்பதாக சிறிலங்கா ஆடவர் மற்றும் மகளிர் தலைமை தேர்வாளர் உப்புல் தரங்க தெரிவித்துள்ளார்.
மேலும், வருகின்ற 28 ஆம் திகதி ஆரம்பமாகும் ரி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இரண்டு பயிற்சி ஆட்டங்களில் விளையாட உள்ளமை குறிப்பிடத்தக்கது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.