வரலாற்றில் இன்று – 25.05.2024
வரலாற்றில் இன்று – 25.05.2024

(புதியவன்)

மே 25  கிரிகோரியன் ஆண்டின் 145 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 146 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 220 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

கிமு 240 – ஏலியின் வால்வெள்ளி சூரியனுக்கு அருகாக சென்றமை முதல் தடவையாக அவதானிக்கப்பட்டது.[1]
1085 – காசுட்டில் மன்னர் ஆறாம் அல்போன்சோ டொலேடோவை முசுலிம்களிடம் இருந்து கைப்பற்றினார்.[2]
1521 – புனித உரோமைப் பேரரசர் ஐந்தாம் சார்லசு மார்ட்டின் லூதரை சமயத்தில் இருந்து ஒதுக்கி வைத்தார்.[3]
1644 – மிங் சீனத் தளபதி வூ சங்குய் மஞ்சு ஆக்கிரமிப்பாளர்களுடன் கூட்டணியை ஏற்படுத்தினார். மஞ்சுப் படைகள் தலைநகர் பெய்ஜிங்கை நோக்கிச் செல்லுவதற்காக சீனப் பெருஞ்சுவரின் சன்காய் பாதைகளைத் திறந்து விட்டார்.
1659 – ரிச்சார்ட் குரொம்வெல் இங்கிலாந்தின் "ஆட்சிக் காவலர் பெருமகன்" பதவியைத் துறந்தார். பொதுநலவாய இங்கிலாந்தின் இரண்டாவது குறுகிய கால அரசு ஆரம்பமானது.
1660 – இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் அழைப்பை ஏற்று இரண்டாம் சார்லசு டோவர் வந்து சேர்ந்தார். ஆலிவர் கிராம்வெல்-தலைமையிலான பொதுநலவாய இங்கிலாந்து முடிவுக்கு வந்து, மன்னராட்சி ஆரம்பமானது.
1810 – அர்ஜென்டீனாவில் இடம்பெற்ற புரட்சியின் போது ஆயுதம் தரித்த புவெனசு ஐரிசு மக்கள் எசுப்பானிய ஆளுநரை வெளியேற்றினார்கள்.
1812 – இங்கிலாந்தில் ஜரோ என்ற இடத்தில் இடம்பெற்ற சுரங்க வெடி விபத்தில் 96 பேர் உயிரிழந்தனர்.
1837 – கனடாவின் கியூபெக் மாநிலத்தில் பிரித்தானியாவின் ஆட்சிக்கெதிராக நாட்டுப்பற்றாளர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள்.
1865 – அமெரிக்காவின் அலபாமாவில் "மொபைல்" என்ற இடத்தில் தொழிற்சாலையில் இடம்பெற்ற வெடிப்பில் 300 பேர் உயிரிழந்தனர்.
1895 – புதின ஆசிரியர் ஆஸ்கார் வைல்டு ஆண்களுடன் தொடர்பு வைத்திருந்தாகக் குற்றம் சாட்டப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார்.
1914 – அயர்லாந்துக்கு அதிக அதிகாரம் வழங்கும் சட்டமூலம் ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை ஏற்றுக் கொள்ளப்பட்டது.
1926 – பாரிசில் அமைந்திருந்த நாடுகடந்த உக்ரைனிய மக்கள் குடியரசின் தலைவர் சைமன் பெத்லியூரா என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1938 – எசுப்பானிய உள்நாட்டுப் போர்: அலிசாண்டே நகரின் மீது நடத்தப்பட்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் 313 பேர் கொல்லப்பட்டனர்.
1940 – இரண்டாம் உலகப் போர்: செருமனி போலோன் துறைமுகத்தைக் கைப்பற்றியது.
1946 – முதலாம் அப்துல்லா ஜோர்தான் அமீராக அந்நாட்டு நாடாளுமன்றத்தினால் நியமிக்கப்பட்டார்.
1953 – அணுகுண்டு சோதனை: நெவாடாவில் ஐக்கிய அமெரிக்கா தனது முதலாவதும் கடைசியுமான அணு ஆற்றலினாலான பீரங்கியைச் சோதித்தது.
1955 – ஐக்கிய அமெரிக்காவில் கேன்சஸ் மாநிலத்தில் "உடால்" என்ற சிறு நகரை இரவு நேர சுழல் காற்று தாக்கியதில் 80 பேர் உயிரிழந்தனர்.
1961 – அப்பல்லோ திட்டம்: பத்தாண்டுகளின் இறுதிக்குள் சந்திரனுக்கு மனிதனை அனுப்பும் ஐக்கிய அமெரிக்காவின் திட்டத்தை அரசுத்தலைவர் ஜான் எஃப். கென்னடி அமெரிக்கக் காங்கிரசில் அறிவித்தார்.
1963 – அடிஸ் அபாபாவில் ஆபிரிக்க ஒன்றியம் உருவானது.
1977 – ஸ்டார் வோர்ஸ் திரைப்படம் வெளிவந்தது.
1977 – வில்லியம் சேக்சுபியரின் இலக்கியங்கள் மீதான தடையை சீனா நீக்கியது. 1966 இல் ஆரம்பமான சீனப் பண்பாட்டுப் புரட்சி முடிவுக்கு வந்தது.
1979 – ஐக்கிய அமெரிக்காவின் டிசி-10 விமானம் ஒன்று ஓகேர் பன்னாட்டு வானூர்தி நிலையத்துக்கு அருகில் விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணித்த அனைத்து 271 பேரும் தரையில் இருவரும் உயிரிழந்தனர்.
1981 – ரியாத் நகரில் பகுரைன், குவைத், ஓமான், கத்தார், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கிடையேயான வளைகுடா கூட்டுறவுப் பேரவை உருவானது.
1982 – போக்லாந்து போரில் கவெண்ட்ரி என்ற ஆங்கிலேயக் கப்பல் மூழ்கியது.
1985 – வங்காள தேசத்தில் இடம்பெற்ற சூறாவளியில் 10,000 பேர் வரையில் உயிரிழந்தனர்.
1997 – சியேரா லியோனியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் அகமது கப்பா பதவியில் இருந்து ஆகற்றப்பட்டார்.
2000 – லெபனானில் 22 ஆண்டுகளாக நிலை கொண்டிருந்த இசுரேல் இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறினர்.
2002 – சீன விமானம் ஒன்று தாய்வானில் நடுவானில் வெடித்துச் சிதறியதில் 225 பேர் உயிரிழந்தனர்.
2002 – மொசாம்பிக்கில் தொடருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 197 பேர் உயிரிழந்தனர்.
2008 – நாசாவின் பீனிக்சு விண்ணூர்தி செவ்வாயில் தரையிறங்கியது.
2009 – வட கொரியா தனது இரண்டாவது அணுகுண்டு சோதனையை நிகழ்த்தியது.
2012 – டிராகன் விண்கலம் அனைத்துலக விண்வெளி நிலையத்துடன் இணைந்தது.
2013 – இந்தியாவில் சத்தீசுகர் மாநிலத்தில் இந்திய தேசிய காங்கிரசு அரசியல்வாதிகள் மீது மாவோயிசப் போராளிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 28 பேர் கொல்லப்பட்டனர், 32 பேர் காயமடைந்தனர்.
2013 – பாக்கித்தான், குச்ராத் நகரில் பாடசாலைப் பேருந்து ஒன்றில் குண்டு வெடித்ததில் 18 பேர் உயிரிழந்தனர்.


பிறப்புகள்


1320 – உகான்டு கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1370)
1803 – ரால்ப் வால்டோ எமேர்சன், அமெரிக்கக் கவிஞர், மெய்யியலாளர் (இ. 1882)
1855 – வி. கனகசபைப் பிள்ளை, ஈழத்துத் தமிழறிஞர் (இ. 1906)
1865 – பீட்டர் சீமன், நோபல் பரிசு பெற்ற டச்சு இயற்பியலாளர் (இ. 1943)
1866 – மு. சி. பூரணலிங்கம் பிள்ளை, தமிழகத் தமிழறிஞர் (இ. 1947)
1877 – சா. தர்மராசு சற்குணர், தமிழகத் தமிழறிஞர் (இ. 1952)
1878 – சோமசுந்தரப் புலவர், ஈழத்துப் புலவர் (இ. 1953)
1886 – ராஷ் பிஹாரி போஸ், இந்தியப் போர்வீரர், செயற்பாட்டாளர் (இ. 1945)
1887 – பியட்ரல்சினாவின் பியோ, இத்தாலியப் புனிதர் (இ. 1968)
1899 – காஜி நஸ்ருல் இஸ்லாம், பங்காளக் கவிஞர், எழுத்தாளர், புல்லாங்குழல் கலைஞர் (இ. 1976)
1907 – யு நூ, பர்மாவின் 1-வது பிரதமர் (இ. 1995)
1927 – பால் ஆலிவர், பிரித்தானியக் கட்டிடக்கலை வரலாற்றாளர்
1935 – ஆர். சிவலிங்கம், ஈழத்து எழுத்தாளர்
1936 – இரா. பாலகிருஷ்ணன், மலேசியத் தமிழ் வானொலி ஒலிபரப்பாளர், ஊடகவியலாளர்
1939 – கவுண்டமணி, தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர்
1939 – இயன் மெக்கெல்லன், ஆங்கிலேய நடிகர்
1953 – ஈவ் என்சுலர், அமெரிக்க தயாரிப்பாளர்
1954 – முரளி, இந்திய நடிகர், அரசியல்வாதி (இ. 2009)
1958 – டோரதி ஸ்டிரெய்ட், அமெரிக்க எழுத்தாளர்
1972 – கரண் ஜோஹர், இந்திய நடிகர், இயக்குநர்
1933 – அநு. வை. நாகராஜன், ஈழத்து எழுத்தாளர்
1977 – கார்த்தி, தமிழகத் திரைப்பட நடிகர்


இறப்புகள்


986 – அல் சுஃபி, பாரசீக வானியலாளர் (பி. 903)
1085 – ஏழாம் கிரகோரி (திருத்தந்தை) (பி. 1020)
1595 – பிலிப்பு நேரி, இத்தாலிய மதகுரு, புனிதர் (பி. 1515)
1607 – மக்தலேனா தே பாசி, இத்தாலிய கத்தோலிக்கப் புனிதர், கார்மேல் சபைத் துறவி (பி. 1566)
2012 – திலீப், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
1919 – மேடம் சி. ஜே. வாக்கர், அமெரிக்கத் தொழிலதிபர் (பி. 1867)
1939 – பிராங்க் வாட்சன் டைசன், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1868)
1981 – ஆ. தியாகராஜா, இலங்கை அரசியல்வாதி (பி. 1916)
1981 – உரூபி பேய்னி சுக்காட், ஆத்திரேலிய இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1912)
1983 – லிபியாவின் இத்ரிசு (பி. 1889)
1988 – ஏர்ணஸ்ட் ருஸ்கா, செருமானிய இயற்பியலாளர் (பி. 1906)
2005 – சுனில் தத், இந்திய நடிகர், இயக்குநர், அரசியல்வாதி (பி. 1929)
2013 – டி. எம். சௌந்தரராஜன் தமிழ்த் திரைப்படப் பாடகர், (பி. 1923)
2018 – செ. குரு, தமிழக அரசியல்வாதி (பி. 1961)


சிறப்பு நாள்


ஆப்பிரிக்க நாள் (ஆப்பிரிக்க ஒன்றியம்)
ஆப்பிரிக்க விடுதலை நாள் (ஆப்பிரிக்க ஒன்றியம், ராஸ்தஃபாரை)
விடுதலை நாள் (ஜோர்தான், ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து 1946)
விடுதலை நாள் (லெபனான்)
சர்வதேச காணாமல் போன குழந்தைகள் தினம் (ஐ)

#srilankanews #jaffnanews #uthayannews #recentnews #breaking #newsupdate

281 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.