ஹினிதுமஇ கும்புரேகொடவில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹினிதும பொலிஸார் தெரிவித்தனர்.
ஹினிதும கும்புரேகொட ஹபரகடையைச் சேர்ந்த 34 வயது நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் தனது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால் அயல் வீட்டிலிருந்து மின்சார இணைப்பைப் பெற்றுக் கொள்ளுவதற்காக அங்குச் சென்றிருந்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து காயமடைந்தவர் மெதகம மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் இவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக கராப்பிட்டிய மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹினிதும பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.