(யோகி)
ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் கிளிநொச்சி மாவட்டத்திற்கான 15பேர் கொண்ட நிர்வாக தெரிவு கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் (25) இன்று நடைபெற்றதோடு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ்பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்
தமிழ் மக்களின் உரிமையை பெற்றுக்கொள்ளும் பலம் மிக்க கட்சியாக உள்ளது,அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம் ,அடுத்து தேர்தல்கள் நடைபெறவுள்ளது, தமிழ் மக்களின் உரிமையை பெற்றுக்கொள்ள தமிழ் பொது வேட்பாளரை நியமிப்பதாக கொள்கை அளவில் தீர்மானம் எடுத்திருக்கின்றோம், சிவில் சமூக அமைப்புக்களும் ஒத்துழைப்பு வழங்கவுள்ளனர்.
போர் முடிந்து பல பிரச்சனைகளை எதிர்நோக்கி வருகின்றோம், வருகின்ற அரசலைவர்களும் பாராமுகமாக இருக்கின்றனர்,சிங்கள தலைவர்களும் வெளிநாடுகளும் புரிந்து கொள்வதற்கு பொது வேட்பாளரை நிறுத்தவுள்ளோம் என கூறியுள்ளார்.
இக் கலந்துரையாடலில் ரெலோ கட்சியின் ஊடகப்பேச்சாளர் சுரேந்திரன் குருசாமி, மற்றும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சியின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.