(புதியவன்)
அரச தலைவரை சந்திக்க தயாரில்லை; வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கத் தலைவி தெரிவிப்பு!
அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க வடமாகாணத்துக்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், வடக்கு, கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தின் தலைவி யோகராசா கனகரஞ்சினி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில் ''இலங்கை அரசாங்கத்துடன் எத்தனை தடவைகள் பேசியிருக்கிறோம், அரச தலைவர்களாக இருந்தவர்களை எத்தனை தடவைகள் சந்தித்திருக்கிறோம் என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம் அத்துடன், இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட 12 இற்கும் மேற்பட்ட ஆணைக்குழுக்களை பல்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்துள்ளோம்.இறுதியாக மூன்று மாத காலத்துக்குள் எங்களுக்கான தீர்வை பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி ஐந்து பேரின் சுயவிபரக் கோவைகளை, சாட்சியங்களுடன் கையளித்திருந்தோம்.ஆனால், நான்கு வருடங்களாகியும், நாங்கள் வழங்கிய கோரிக்கைகள் தொலைந்து போய்விட்டதாகவும், மீண்டும் அவற்றை கையளிக்குமாறும் கோருகின்றனர். இப்படியானதொரு இலங்கை அரசாங்கத்திடம் நாங்கள் பேசத் தயாரில்லை. அரச தலைவரையும் சந்திக்கத் தயாரில்லை. பன்னாட்டின் ஊடான ஒரு பொறிமுறையை எதிர்பார்த்து எமது நகர்வுகளை முன்னெடுக்கின்றோம்'' எனத் தெரிவித்துள்ளார்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.