(மாதவன்)
எங்கள் போராட்டத்துக்கு நீதிமன்றில் தடை உத்தரவு; ஊடக சந்திப்பில் உரத்துப் பேசிய வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்
கிளிநொச்சியில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சார்பில் பேசிய கதிர்காமநாதன் கோகிலவாணி தெரிவிக்கையில், இன்று கிளிநொச்சிக்கு அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க பயணமொன்றை மேற்கொண்டுள்ளார். அவரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்ப்பு போராட்டம் ஒன்றை நிகழ்த்த திட்டமிட்டிருந்தோம், ஆனால் அந்தப் போராட்டத்துக்கு நீதிமன்ற தடை உத்தரவு விதிக்கப்பட்டது என்றார்.
போர்க்காலத்தில் இராணுவத்திடம் நேரடியாக ஒப்படைக்கப்பட்ட மற்றும் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்ட தமது பிள்ளைகள் இன்னும் திரும்ப வரவில்லை. இன்று காணாமல் ஆக்கப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டு விட்டனர்.எத்தனையோ போராட்டங்கள் வாயிலாக ஊடகங்கள் வாயிலாக தெரிவித்தும் இதுவரையில் எமக்கான நீதி கிடைக்கவில்லை எனவும் தெரிவித்திருந்தனர்.
கடந்த போர்க் காலங்களில் உண்ண உணவின்றி உப்புக் கஞ்சி குடித்து உயிரை காத்துக் கொண்டோம் அதனை பன்னாட்டுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் எடுத்து காட்டும் முகமாக மே18 முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு வந்தது. அந்த நினைவு கஞ்சிப் பானைகளை இராணுவம் மற்றும் பொலிசார் காலால் தட்டி சுகாதார கேடு என பலரை கைது செய்தனர்.ஆனால் இன்று நாடுமுழுவதும் எந்த குழப்பங்களும் இல்லாமல் வெசாக்கை கொண்டாடி வருகின்றனர். அப்படி என்றால் தமிழருக்கு ஒரு சட்டம் சிங்களவர்களுக்கு ஒரு சட்டமா என கேள்விகள் எழுந்துள்ளதாகவும், இதன் காரணங்களுக்காகவே அரச தலைவரின் வருகையை இன்று எதிர்த்து பன்னாட்டு நாடுகளுக்கு உணர்த்தும் வகையில் ஊடகங்கள் வாயிலாக கூறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.