(ஆதவன்)
அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்க விக்னேஸ்வரனின் வீடுதேடிச் சென்று தெரிவிப்பு பொதுவேட்பாளரை தமிழர்களால் ஒற்றுமையாக முன்னிறுத்த முடியாது என அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்க தன்னிடம் தெரிவித்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்துள்ள அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனை அவரது இல்லத்துக்கு நேரில் சென்று சந்தித்தார்.
இந்தச் சந்திப்புத் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் ஊடகங்களுக்குத் தெரிவித்ததாவது:-
வயது முதிர்ந்தவர்கள் எவ்வாறு உரிமைகள் சம்பந்தமாக அரசியல் ரீதியாக யோசிக்கின்றோமோ அவ்வாறு எமது இளைஞர், யுவதிகள் உரிமைகள் சார்ந்து சிந்திப்பதில்லை என ரணில் கூறினார். அவர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுத்து மேம்படுத்த வேண்டும். அதில் தான் எமது வருங்காலம் உள்ளது எனவும் தெரிவித்தார்.
பொதுவேட்பாளர் தொடர்பாகவும் இதன் போது பேசப்பட்டது. பொதுவேட்பாளரை எங்களால் நிறுத்தமுடியாது என்ற கோணத்தில் ரணில் விக்கிரமசிங்கவின் கருத்து அமைந்தது. தமிழ் மக்கள் ஒற்றுமையாக, ஒருங்கிணைந்து தீர்மானத்தை முன்னெடுப்பதற்கான தகைமை, பின்னணி இல்லை என்று சொன்ன அவர், அதனால் பொதுவேட்பாளரை நிறுத்த மாட்டோம் என்று குறிப்பிட்டார்.
பொதுவேட்பாளருக்கு ஒருவாக்கு ஏனைய இரண்டு வாக்குகளையும் சிங்கள வேட்பாளருக்கு வழங்குதலையும் அவர் வரவேற்றார். ஆனால், அவருடைய எண்ணம் என்னவென்றால் பொதுவேட்பாளரை தமிழரால் நிறுத்தமுடியாது என்பதாகும். அதே எமக்கு ஒரு வெட்கக்கேடான விடயம். அதை அவர் மனம்திறந்து சொன்னார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.