(புதியவன்)
வவுனியா - கனகராயன்குளம் காட்டு பிரதேசத்தில் நேற்று மாலை தொடருந்துடன் யானைகள் மோதுண்டதில் தொடருந்து தடம்புரண்டுன்டுள்ளது.
யாழ்ப்பாணத்திலிருந்து அனுராதபுரம் நோக்கி சென்ற தொடருந்து கனகராயன்குளம் காட்டு தொடருந்து பாதையை ஊடறுத்து சென்ற யானை மற்றும் குட்டியுடன் மோதுண்டுள்ளது.
இதன் காரணமாக யானை சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளதுடன், யானை குட்டி காயங்களுடன் பொதுமக்களின் உதவியுடன் மீட்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக வனஉயிரிகள் பணிமனையால் எடுத்துச் செல்லப்பட்டது. விபத்து காரணமாக சம்பவ இடத்துக்கு நான்கு மணி நேரத்தின் பின் பிறிதொரு தொடருந்து சேவையில் ஈடுபட்டது.[எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.