(புதியவன்)
பெலியத்த கொஸ்கஹகொடயில் கணவனுக்கு விசம் வைத்து கொலை செய்த குற்றச்சாட்டில் மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலைச் சம்பவம் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் உயிரிழந்த நபரின் 45 வயது மனைவியும் அவரது சகோதரனும் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனது கணவரின் மதுவில் விஷ இரசாயனத்தை கலந்து கொலை செய்ததாக மனைவி பெலியத்த பொலிஸாலிடம் தெரிவித்துள்ளார்.
சம்பவ தினத்தன்று வீட்டில் மது அருந்திய போது ஏற்பட்ட சுகவீனம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பிரேத பரிசோதனையில் விஷம் அருந்தி உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் அறிக்கையிட்டுள்ளனர். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.