கிளிநொச்சியில் மக்கள் கரகோசம்
(ஆதவன்)
அரச நிகழ்வை அரசதலைவர் ரணிலின் தேர்தல் பரப்புரை மேடையாக்க வேண்டாம் என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தபோது மக்கள் கரகோஷம் எழுப்பியுள்ளனர்.
அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு இரணைமடுவில் நேற்று இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன், அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்கவை புகழ்ந்து தள்ளினார். அடுத்த அரசதலைவர் தேர்தலில், ரணிலுக்கு வாக்களிக்க வேண் டும் எனவும் கோரினார்.
இதன் பின்னர் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், காணி உரிமம் வழங்குவது போன்ற அரசதலைவரின் அரச நிகழ்வுகளை தேர்தல் பரப்புரையாகப் பயன்படுத்தக்கூடாது எனச் சொன்னதும், நிகழ்வுக்கு வந்திருந்த மக்கள் விசிலடித்து பெரும் கரகோஷம் எழுப்பினர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.