(புதியவன்)
சுங்கத்துறையில் வேலை பெற்றுத் தருவதாக கூறி பணத்தை கொள்ளையடிக்கும் கும்பல் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்குமாறு சுங்கப் பணிமனை பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது.
இது தொடர்பில் தமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக சுங்கப் பணிமனையின் பேச்சாளர் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார். அரச துறைக்கு போட்டிப் பரீட்சை எழுதுபவர்களை இலக்காகக் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப் படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இலங்கை சுங்கப் பணிமனையில் இணைவதற்கு அவ்வாறானதொரு முறை இல்லை எனவும் போட்டிப் பரீட்சையில் அதிக புள்ளிகளைப் பெற்றவர்களே பணிக்கு அமர்த்தப்படுவர் எனவும் சிவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.