(செல்வன்)
நாட்டினுடைய அரசதலைவர் ரணில் விக்கிரமசிங்க வடக்குக்கான மூன்று நாள் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில் இன்று காலை முல்லைத்தீவு மாவட்டத்துக்கு வருகை தந்தார்.
அந்த வகையில் இன்று காலை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியிலே மக்களுக்கான காணி உரிமைப்பத்திரம் வழங்குகின்ற நிகழ்வில் கலந்துகொண்டு அதன் பின் மாங்குளத்தில் அமைக்கப்பட்டிருக்கின்ற மருத்துவப் புனர்வாழ்வு சிகிச்சை மற்றும் உளநல மேம்பாட்டு நிலையத்தினை திறந்து வைக்கவும் உள்ளார்.
மாங்குளம் மகா வித்தியாலயா மைதானத்துக்கு உலங்குவானூர்தியிலே வருகை தருகின்ற ரணில் விக்கிரமசிங்க மாங்குளம் மருத்துவமனைக் கட்டடத்தை திறந்து வைக்க இருக்கின்ற நிலைமையில் மாங்குளம் நகரம் மற்றும் மாங்குளம் மகா வித்தியாலய மைதானத்தை சூழ்ந்துள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கின்றது.
குறிப்பாக அரசதலைவர் ரணில் விக்ரமசிங்கவின் வடக்குப் பயணத்தின் போது வடக்கில் ஊடகவியலாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கின்ற நிலையில் ஊடக சுதந்திரம் பற்றி பேசுகின்ற அரசதலைவர் ஊடகவியலாளர்களை அனுமதிக்காமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் பலரும் அதிருப்தி வெளியிட்டு வருகின்றனர்.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.