(புதியவன்)
தென் பசுபிக் தீவு நாடான பப்புவா நியூ கினியாவில் ஏற்பட்ட மிகப்பெரிய மண்சரிவில் சுமார் 670இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என ஐக்கிய நாடுகள் (UN) சபையின் அதிகாரி செர்ஹான் அக்டோப்ராக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள தகவலிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
"தற்போது 150இற்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணுக்குள் புதைந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி 670இற்கும் மேற்பட்ட மக்கள் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
அதேவேளை அப்பகுதியில் தண்ணீர் வழிந்தோடுவதுடன் நிலம் சரிவது தொடர்ந்தாலும் மிகப்பெரிய ஆபத்து ஏற்படலாம்.
மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கிராமத்திலிருந்து இடம்பெயர்ந்துள்ளனர். அது மாத்திரமன்றி அப் பகுதியிலுள்ள உணவுத் தோட்டங்கள் மற்றும் நீர் விநியோகங்கள் ஆகியன முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன” எனவும் குறிப்பிட்டுள்ளார்.(க)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.