நாய் வேசம் போட்டால் குரைக்கத்தான்வேணும். அதுக்காக பொலிஸ் உடுப்புப் போட்டால் பத்தரைக் கும்பிட வேணுமெண்டு கட்டாயமில்லைத்தானே, ஆனால் காங்கேசன்துறை பொலிஸ் ஏரியாக்குள்ள வேலை செய்யிற எல்லாத் தமிழ்ப் பொலிஸ்காரரையும் கட்டாயம் காங்கேசன்துறை கெமுனு விகாரைக்கு சிவில் உடுப்பில வரச்சொல்லி மேலிடத்தில இருந்து ஓர்டர் வந்திருக்கு. மேலிடத்து உத்தரவெண்டதால எல்லாத் தமிழ்ப் பொலிஸ்காரரும் சிவில் உருப்போட அங்க போயிருக்கினம். ஏற்கனவே முன்னணிக்காரர் தையிட்டியில ஆர்ப்பாட்டம் செய்யிறதால, அவையை கைது செய்யிறதுக்காகவோ, இல்லாட்டி அவையோட சேர்ந்து நிக்கிற மாதிரி நிண்டு தகவல் அறியிறதுக்காகவோ தான் இப்பிடி சிவில் உருப்போட விகாரைக்குப் போகச் சொல்லி இருக்கினம் எண்டு அவை முதலில நினைச்சிருக்கினம். ஆனால் அங்க போனபிறகு தான், காங்கேசன்துறை கெமுனு விகாரை புத்தரைக் கும்பிடத்தான் தங்களை சிவில் உருப்பில வரச் சொல்லி இருக்கினம் எண்டு தமிழ்ப் பொலிஸ்காரருக்கு விளங்கி இருக்கு. வேண்டா வெறுப்பா 'புத்தருக்கு அரோகரா' எண்டு கும்பிட்டுட்டுத்தான் வந்தவையாம்.
என்னதான் இந்த நாட்டில பௌத்தத்துக்கு முன்னுரிமை குடுத்தாலும், ஒருத்தர் என்ன மதத்தைப் பின்பற்ற வேணும். எந்தக் கடவுளைக் கும்பிட வேணும் எண்ட மதச் சுதந்திரம் ஒவ்வொருத்தருக்கும் இருக்கும். பொலிஸ் எண்டாப்போல அவை யொண்டும் அரசாங்கத்தின்ர அடிமையர் இல்லை. அடிமையளைக் கூட 'இந்தக் கடவுளைத் தான் கும்பிட வேணும் எண்டு பலாத்காரம் செய்ய ஏலாது. பார்க்கப் போனால், சிங்கள அரசாங்கம் தமிழ்ப் பொலிஸ்காரரை அடிமையளை விடவும் கேவலமாத்தான் பாக்குது போல. இல்லாட்டி கெமுனு விகாரைக்குப்போய் புத்தரைக் கும்பிட வேணும் எண்டு என்னெண்டு ஓர்டர் போடமுடியும்? இத்தனைக்கும் அந்தப் புத்தவிகாரையை சட்டவிரோதமா, கோயில்காணியைப் பிடிச்சு. ஒரு அனுமதியுமில்லாமல் அடாத்தாக் கட்டியிருக்கு. அப்பிடி அடாத்தாக் கட்டின ஒரு சட்ட விரோத விகாரைக்கு சட்டத்தைக் காக்கவேண்டிய பொலிஸ் காரரைக் கட்டாயப்படுத்திக் கும்பிட அனுப்பிறதும் சட்டவிரோதம் தானே?
ஏற்கனவே சிங்கள ஏரியாக்களில இருந்து பஸ்களில ஆக்களை ஏத்தியந்து புத்தருக்குப் பூசை வைச்சுக் களைச்சுப் போட்டினம் போல. புத்தரைக் கும்பிடக் கூட்டியாறதுக்கும் கூலி குடுக்கத்தானே வேணும். எவ்வளவு நாள் தான் இப்பிடி கூலிக்கு மாரடிக்கிற ஆக்களைக் கூட்டியர ஏலும், அதால தான் கூலியில்லாம கும்பிடுறதுக்கு தமிழ்ப் பொலிஸ்காரரைப் பிடிச்சிருக்கினம் போல. புத்தருக்கு வைகாசிப் பறுவத்தில புத்தி வந்தாலும், அவரைக் கட்டாயப்படுத்திக் கும்பிட வைக்கிற உந்தப் புதருகளுக்கு கடைசி வரைக்கும் நல்ல புத்தி வராது போல.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.