பலஸ்தீனத்தை தனிநாடாக ஏற்று அங்கீகரிப்பதாக அறிவித்திருக்கின்றது நோர்வே. கூடவே ஸ்பெய்ன் மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளும் கூட்டாகச் சேர்ந்து இந்த அறிவிப்பை விடுத்திருக்கின்றன. மத்திய கிழக்கில் - அதிலும் குறிப்பாக காஸாவில் அமைதி திரும்ப வேண்டுமாயின், இஸ்ரேல் மற்றும் பலஸ் தீனம் என்ற ‘இரு நாட்டுக் கொள்கையே ஒரே தீர்வு' என்பதே இந்த நாடுகளின் கருத்தாக அமைந்துள்ளது.
பலஸ்தீனம் அங்கீகரிக்கப்பட்டால் அதன் இராணுவக் கொள்கைகள் தொடர்பில் இந்த நாடுகள் தெளிவாகத் தெரிவிக்கவில்லையாயினும் தனி நாடு என்பதில் ஒன்றித்திருக்கின்றன. நல்லது! பலஸ்தீனத்துக்கு ஐ.நா.வில் முறையான அங்கீகாரம் ஒன்று இப்போதைக்குக் கிடைக்கச் சாத்தியமே யில்லை. ஏனெனில், அமெரிக்காவின் வீட்டோ அதி காரம் பலஸ்தீனர்களின் வேணவாக்களுக்கு முன்பாக பூதம் போன்று வியாபித்திருக்கின்றது. எனவே. ஐ.நா.வுக்கு அப்பாற்பட்ட தீர்வுகளும், ஐ ஐ.நா.வுக்கு வெளியே மேற்கொள்ளப்படும் வலியுறுத்தல்களும் தான் பலஸ்தீனர்களின் சுதந்திரத்தில் காலத்தேவை யானவை என்றிருக்கையில்தான் 'சுதந்திரப் பலஸ் தீனத்துக்கான வலியுறுத்தலை மேற்கொள்வதற்காக நோர்வே -ஸ்பெய்ன் - அயர்லாந்து எனும் இந்தக் கூட்டணி அமைக்கப்பட்டிருக்கின்றது.
ஆனால், இன்று பலஸ்தீனத்துக்காகத் துடிக்கும் நோர்வே, ஈழத்தமிழர்களின் விடயத்தில் தான் ஆற்றிய பங்களிப்பு என்ன? என்ற கேள்வியையும் எழுப்பவேண்டியது இன்று தவிர்க்கமுடியாத தாகின்றது. விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மௌனிக்கப்படாதிருந்த அக்காலத்தில், ஸ்ரீலங்கா அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான பேச்சுகளை- இராஜதந்திர நடவடிக் கைகளை மேற்கொண்ட நாடுகளில் நோர்வேக்கும் பிரதான பங்குண்டு. இதனால்தான், 'ஒஸ்லோ புரிந்துணர்வு பேச்சுகளில்* ரில்' ஈடுபட்டு. ஈடுபட்டு, பல விட்டுக் கொடுப்புகளைச் செய்து கொள்ளவும் புலிகள் இணங்கினர். அந்தளவுக்கு தமிழர்களின் நலன்களை நோர்வே புரிந்து வைத்திருக்கின்றது என்றநம்பிக்கை எம்மினத்தில் இருக்கவும் செய்தது. ஆனால், 'சுதந்திரப் பலஸ்தீன அறிவிப்புப் போன்ற' தற்றுணிவான அறிவிப்புகளை ஈழத்தமிழர் விடயத்தில் மேற்கொள்வதற்கு நோர்வேயால் முடிந்ததா? அல்லது நோர்வே செய்துவிட்ட காரியம்தான் என்ன?
இன்றுகாஸாவில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் காட்சிகள்தான் அன்று முள்ளிவாய்க்காலில் இடம் பெற்றன. இஸ்ரேலிய இராணுவத்துக்கு எதிராக இன்று முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் போர்க் குற்றச்சாட்டுகள்தான் இலங்கை இராணு வத்துக்கு எதிராகவும் முன்வைக்கப்பட்டன காஸாவில் இன அழிப்பின் மூலம் ஜியோனிசமும் யூதமும். முள்ளிவாய்க்காலில் இன அழிப்பின் மூலம் 'பௌத்த பேரினவாதம்' அவ்வளவே வேறுபாடு. மற்றும்படி குருதிச் சகதியும், சதைத் துண்டுகளும் ஒன்றுதான். சுதந்திரப் பலஸ்தீனத்துக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் போடப்படும் முட்டுக் கட்டைகளை மேவிய தற்றுணிவான அறிவிப் பைப்போன்று, ஈழத்தமிழர்களின் நலன்களிலும் ஒஸ்லோ தூய சிந்தனையைக் கொண்டிருந்தால், ஈழத்தமிழர்களின் மனக்காயங்களுக்கு அது மருந்தாகவே அமைந்திருக்கும். ஆனால், நோர்வே இழைத்ததோ வரலாற்றுத் தவறு. ஈழத்தமிழர்களின் முதுகைக் குத்திக் கிழித்துக் கொண்டிருக்கும் வாள்களில் ஒன்று நோர்வேயுடையதும் தான். அதில் தமிழர்கள் தெளிந்த சிந்தனையை என்றும் கொண்டிருப்பர்...!
#ஆசிரியர்_தலையங்கம் #வாசகர்கடிதம் #உதயன் #eelam #eelamnews #jaffnanews #uthayannews #recentnews #breaking
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.