தமிழர்களின் வரலாற்றில் திருப்புமுனையாகுமா?
(ஆதவன்)
பெருங்கற்காலப் பண்பாட்டை விஞ்ஞானபூர்வமாக நிரூபிக்கக் கூடிய வகையிலான சான்றுகள் கிடைக்கப்பெறும் என நம்பப்படும் ஆனைக் கோட்டையில், அடுத்த மாதம் அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இலங்கையின் பெருங்கற்கால பண்பாடுகள் நிறைந்ததாகக் கருதப்படும் ஆனைக்கோட்டையில் அடையாளம் காணப்பட்டுள்ள ஒருபகுதியில் இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியர்களான இரகுபதி மற்றும் இந்திரபாலா ஆகியோர் 1980ஆம் ஆண்டுகளில் முன்னெடுத்த அகழ்வாய்வு மற்றும் மேலாய்வுகளில் இது பெருங்கற்கால பண்பாடு என உறுதிபடுத்தும் வகையில் சான்றுப் பொருட்கள் கிடைக்கப்பெற்றிருந்தன. இந்த நிலையில் புலம்பெயர் நிதிப்பங்களிப்புடன் யாழ். பல்கலைக்கழகப் பேராசிரியர் பரமுபுஷ்பரட்ணம், தென்னிலங்கை தொல்லியல்துறை பேராசிரியர்கள், யாழ். பல்கலைக்கழக தொல்லியல்துறை விரிவுரையாளர்கள், தொல்லியல் பணிமனை அதிகாரிகள் இந்த அகழ்வுகளில் பங்கெடுக்கவுள்ளனர் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
பெருங்கற்கால சான்றுகள் ஆனைக்கோட்டையில் இருப்பது ஏற்கனவே அகழ்வுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பெருங்கற்காலப் கலாசார மையங்கள் இனம் காணப்பட்டுள்ளன. காரைநகர், ஆனைக்கோட்டை, கந்தரோடை, வல்லிபுரம், பூநகரி, மாந்தை, தேக்கம், பொம்பரிப்பு, அக்குறுகொட, அநுராதபுரம், கதிர்காமம், இபன்கட்டுவ, அம்பாந்தோட்ட போன்ற இடங்களில் காணப்படுகின்றன. இவை எந்த ஒரு பௌத்த செல்வாக்குகளும் அற்ற நிலையில் வேர் ஊன்றி இருந்ததாகவும் பெருங்கற்கால பண்பாட்டில் குறிப்பிடப்படுகின்றது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.