(ஆதவன்)
மிருசுவில் ஏ-9 வீதியில் பேருந்திலிருந்து தவறி விழுந்த இளைஞனும், மீசாலை ஏ-9 வீதியில் முச்சக்கரவண்டியுடன் உந்துருளி மோதிய விபத்தில் காயமடைந்த இருவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவங்கள் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இடம் பெற்றன.
மீசாலையிலுள்ள ஒழுங்கையிலிருந்து ஏ-9 வீதிக்கு நுழைந்த உந்துருளியை எதிரே வேகமாக வந்த முச்சக்கரவண்டி மோதியது. இதில் உந்துருளியில் பயணித்த இருவர் காயமடைந்துள்ளனர். இவர்கள் சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். மிருசுவில் பகுதியில் பேருந்துத் தரிப்பிடத்தில் நிறுத்துவதற்கு முன்னர் பேருந்திலிருந்து இறங்கிய இளைஞர் தரையில் வீழ்ந்து, தலையில் பலத்த காயமடைந்த நிலையில் கொடிகாமம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.