தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவிப்பு
(புதியவன்)
இந்த ஆண்டில் பொதுத் தேர்தல் நடத்துவதுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எனினும் அரசதலைவர் தேர்தலை நடத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதானி ஏ.எல்.ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமாயின் அரச தலைவர் ரணில் விக்கிரமசிங்க அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டில் தேர்தலுக்காக பத்து பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த நிதியானது முழுக்க முழுக்க அரச தலைவர் தேர்தலை நடத்தும் நோக்கில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் அதன் பின்னர் பொதுத் தேர்தல் நடத்துவதற்காக நிதியை ஒதுக்கீடு செய்ய முடியாது எனவும் அரச தலைவரால் மட்டுமே இதற்கான நிதியை ஒதுக்கீடு செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.(ஞ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.