(புதியவன்)
கடந்த சில நாட்களாக இரம்சா சதுப்பு நிலமான ஆனைவிழுந்தான் சரணாலயத்தில் நூற்றுக்கணக்கான பறவைகளும் மீன்களும் உயிரிழந்துள்ளன.
சுற்றுலாவிகளை கவர்ந்த இடமான ஆனைவிழுந்தான் சரணாலயத்தில் தற்காலத்தில் இடம்பெயர்ந்து வரும் பறவைகள் சுதந்திரமாக வாழ்ந்து இனப்பெருக்கம் செய்யும் நிலையில் அங்குள்ள தொழிற்சாலை ஒன்றிலிருந்து கொட்டப்படும் இரசாயனக் கழிவுகளால் பறவைகள் மற்றும் மீன்கள் இவ்வாறு உயிரிழந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்த மீன்கள் மற்றும் பறவைகளின் மாதிரிகள் பரிசோதனைக்காக பேராதனை சிறப்பு கால்நடை மருத்துவப் பிரிவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக வன விலங்கு வட்டார பாதுகாவலர் டபிள்யூ.எல் உபநந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாசிகளை அகற்றுவதில் அலட்சியம் காட்டப்படுவதால் நீர்நிலைகள் மாசுபட்டுள்ளதாகவும் இதன் விளைவாக மீன்கள் மற்றும் பறவைகள் உயிரிழப்பதாகவும் நீர் உயிரினவளர்ப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.(ஞ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.